சனி, 26 அக்டோபர், 2013

குண்டலினி தியானம். பதிவு 6

பதிவு 1ல் இருந்து பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள முடியும்.
தயவு செய்து பதிவு 1ல் இருந்து பார்க்கவும்.


இப்பொது நாம், நம் உடலில் இந்த வாத, பித்த, கபம் ஆகியவற்றில் எதன் தாக்கத்தில் இருக்கின்றோம், என்று பார்ப்போம். இதை அறிவதற்கு நாம் முதலில் ஒரு சித்தமருத்துவரை நாடி நம் தேகத்தில் எதன் தாக்கம் உள்ளது என்று அறியவேண்டும். 

அப்படி வசதிகள் இல்லாதவர்கள். உங்களின் இடதுகையில் உள்ள மோதிரவிரல், நடுவிரல், மற்றும் ஆட்காட்டி விரலை, உங்களின் வலது கையின் மணிக்கட்டில் ,  பெருவிரலுக்கு கீழ் நாடி பார்க்கும் இடத்தில் வைத்து, அந்த விரல்களின் நுனிப்பகுதியை, ஒவ்வொரு விரலுக்கும் சிறு இடைவெளி விட்டு வைத்து மெதுவாக அழுத்தவும். இப்படி அழுத்தும் பொது , உங்களின் விரல்களின் நுனியில் நாடித்துடிப்பை உணரமுடியும். இதேபோன்று மூன்று முறை செய்து எந்த விரல்நுனியில் துடிப்பை உணர்கின்றீர்கள் என்று உறுதி செய்துகொள்ளுங்கள். 

இந்த நாடித்துடிப்பு மோதிரவிரலில் இருந்தால் உங்கள் உடலில் இப்போது வாயுவின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

நடுவிரலில் துடிப்பு இருந்தால் பித்தத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. 

ஆட்காட்டி விரலில் துடிப்பு இருந்தால் கபத்தின் ஆதிக்கம் அதிகம் உள்ளது.

இப்பொது நாம், இந்த மூன்றில் எத்தன தாக்கம் அதிகம் இருந்தால் என்ன உணவு மற்றும் மருந்து சாப்பிடவேண்டும் என்று மருத்துவரிடம் கேட்டு அதை பின் பற்றுவோம்.

அத்துடன் நாமும் சில வழிகளை சொல்கின்றோம்.
பதிவு 7இல் பார்க்கவும்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக