வெள்ளி, 25 அக்டோபர், 2013

குண்டலினி தியானம். 2

அதை குண்டலினி சக்தி பஞ்ச இந்த்ரியங்களின் மூலம் செய்கின்றது.

உதாரணமாக.

1. கண்.   
தெய்வ திருவுருவம், இயற்க்கை, ஆடல் கலை, சிர்ப்பகலை, மேலும் பலவற்றை கண்ணால் காணும் பொது நம் உடல் சிலிர்க்கின்றது.

2. காது.

தெய்வீகபாடல்கள் ,  சத்தியத்தைகேட்கும்போது, மந்திர உச்சாடனம், இசைக்கருவுயில் புலமை பெற்றவர் அதை இயக்கி வரும் சப்தத்தில், என்று பலவிடயங்களை கேட்கும்போது நம் உடல் சிலிர்க்கும்.

3. மூக்கு. 

நறுமணம், யாக புகை, நெய் விளக்கு வாசம், போன்ற பலவற்றை நுகர்வதில் உடல் சிலிர்ப்பது உண்டு.

4. நாக்கு.

அருமையான உணவு, உடலுக்கும் மனதுக்கும் இதமான ருசியான உணவு அதுவும் மிகவும் அன்பானவர்கள் கையால், அன்புடன் பரிமாறப்படும்பொது.
உடல் சிலிர்க்கின்றது.

5.தோல்.

கோயில்கள், ஆன்மீக பெரியோர்களின் ஆச்சிரமங்கள், புனிதமான இடங்கள், புனிதமான யாகம் போன்ற நடக்கும் இடம், குருவருளால் நாம் தொடப்படும் பொது, ஆசீர்வாதம் பெரும் பொது, போன்ற பல செயல்களால் நம் உடலில் படுகின்ற உணர்வுகளால் நம்மில் உடல் சிலிர்க்கின்றது.

இப்பொழுது உங்களுக்கு அப்படி நடந்திருக்கின்றதா என்று யோசித்துப்பாருங்கள்.


உங்களுக்கு எப்பொழுதாவது கோயிலுக்கு சென்றபோதோ, கோயிலில் இருக்கும்போது, வீட்டில் சுவாமி கும்பிடும்போது, தெய்விக பாடல் கேட்கும் பொது, மந்திரம் கேட்கும் பொது, இது போன்ற ஏதாவது ஒரு தருணத்தில் மனதில் பதியும் படி,உடல் சிலிர்த்தது உண்டாகி இருக்கின்றதா.


ஆம் என்றால்  


தொடரும்... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக