பதிவு 1ல் இருந்து பார்த்தால் மட்டுமே சரியாக புரிந்துகொள்ள முடியும்.
தயவு செய்து பதிவு 1ல் இருந்து பார்க்கவும்.
இந்த குண்டலினி தியானத்தின் வேறு ஒரு தோற்றமே நம் அம்மன் கோவில்களில் பவர்ணமி பூஜை அல்லது ஸ்ரீ சக்கர பூஜை.
நம்மில் பலர் குடும்பப்பொறுப்புகள் அனைத்தையும் முடித்த பின் அல்லது குடும்பவாழ்க்கையில் வெறுப்பு வந்தபின் தான் தியானம், மற்றும் மன அமைதி , மற்றும் ஆன்மீக நாட்டம் கொள்கின்றோம்.
தயவு செய்து பதிவு 1ல் இருந்து பார்க்கவும்.
இந்த குண்டலினி தியானத்தின் வேறு ஒரு தோற்றமே நம் அம்மன் கோவில்களில் பவர்ணமி பூஜை அல்லது ஸ்ரீ சக்கர பூஜை.
இதை ஸ்ரீ சக்ர பூஜையின் வேறு ஒரு தோற்றமே குண்டலினி தியானம் என்றும் சொல்லலாம்.
நம்மில் பலர் குடும்பப்பொறுப்புகள் அனைத்தையும் முடித்த பின் அல்லது குடும்பவாழ்க்கையில் வெறுப்பு வந்தபின் தான் தியானம், மற்றும் மன அமைதி , மற்றும் ஆன்மீக நாட்டம் கொள்கின்றோம்.
ஆனால் இந்த வயதில் நம் உடலை நாம் பலவகைகளில் பழுதாக்கி வைத்து விட்டு இப்போது இந்த சக்ர தியானம் பற்றி தேடி முயற்சி செய்யும் பொது. குண்டலினி சக்தியின் தாக்கத்தால் நம் உடலில் வாதம் கூடினால் அல்லது நம் உடலில் வாதம் அதிகமாக இருந்தால், இந்த வாயுவின் தாக்கம் மிகப்பெரிய இரசாயன மாற்றத்தை நம்மில் ஏற்ப்படுத்தும், அதன் விளைவாக இரத்தக்கொதிப்பு , மாரடைப்பு, இன்னும் பல ஆபத்தான நோய்கள் வாயுவின் தாக்கத்தால் ஏற்ப்படும்.
இதேபோல் இந்த சக்ர தியானத்தின் பொது பித்தம் அதிகம் உள்ளவர்கள், மூளைக்கு செல்லும் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்ப்படுத்தி அல்லது அடைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் நம் மூளை செயல் இழப்பது, பாரிச வாதம் எனும் கை, கால் , வாய், இழுத்துக்கொள்ளுதல் ,போன்றவை ஏற்ப்பட வைப்பு உள்ளது. கபம் அதிகம் ஆகும் போதும் மிக ஆபத்தான நிலைக்கு நாம் தள்ளப்படுகின்றோம்.
இதற்க்கு நம் சித்தர்களும் ரிஷிகளும் கண்ட பல வழிகளில் ஒன்று தான் நம் நாடியை பிடித்து பார்த்து அதன் மூலம் நம் உடல் எந்த தேகமாக இருக்கின்றது என்று தெரிந்து, அதற்கு ஏற்றார்போல , பித்ததேகம் என்றால் அதற்கு உரிய உணவையும் மருந்தையும் கொடுத்து பித்தத்தை குறைத்து நம் தேகத்தை சக்ரதியானத்திற்கு ஆயத்தப்படுத்துதின்றார்கள். இதுபோன்ற சிகிச்சை மூலமே தற்போது பல குரு மகான்களும் தம் மாணவர்களை ஆயத்தபடுத்தி பின் பயிற்சி அளிக்கின்றனர்.
இப்பொது நாம் இந்த வாத பித்த கபத்தையும் அதில் எது நம் உடலில் அதிக அளவு இருக்கின்றது , என்பதையும், அதை எப்படி சரிசெய்வது என்பதையும் பதிவு ஆறில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக