வெள்ளி, 8 நவம்பர், 2013

குண்டலினி தியானம். பதிவு 9

தயவு செய்து பதிவு 1ல் இருந்து படிக்கவும்.

இப்பொழுது வானவில்லுக்கும் நம் சக்கரங்களுக்கும் எப்படி தொடர்பு என்பதை பார்ப்போம்.





இப்பொழுது இந்த படத்தை பார்க்கும் போது ஓரளவுக்கு உங்களுக்கு தொடர்பு இருப்பது தெரியும்.

சரி இப்போது, 
இந்த பிரபஞ்சம் எங்கும் நிரவிக்கிடக்கும் இந்த வண்ண விரிப்பை நம் சாதாரண கண்களால் பார்க்க முடிவதில்லை. ஆனால் இந்த பஞ்ச பூதங்களில் ஒன்றான தண்ணீர் , மழைத்துளிகளின் துகள்கள் மூலம் நம் கண்களுக்கு தெரியவைக்கின்றது. 

அது போல் நாம் ஆழ்நிலை தியானத்தின் மூலம் நம் உடலில் உள்ள இந்த நிறங்களை கண்களை மூடிய நிலையில் காண முடியும். இப்படி காண்பதால் என்னபயன். நம் மனம் ஒடுங்கும்போதே நமக்குள் இருக்கும் அந்த ஆதிசக்தியின் பல பிரமாண்ட சக்திகளை உணரமுடியும் அப்படி உணர்ந்தவரே தனது சரணாகதி நிலையில் இருந்து அந்த அன்பின் வெளிப்பாட்டால் இந்த அனைத்துசக்திக்கும் மூலமான அந்த சிவத்தை உணரமுடியும். மேலும் நாம் இந்த நிறத்தை எவ்வளவு தூரம் வரை சென்று பார்த்திருக்கின்றார்கள் என்றும் எவ்வளவு ஆழமாக பார்த்திருக்கின்றார்கள் என்பதை ஆதிசக்தியின் அருளால் எம் அறிவுக்குப்  புலப்படுத்தியத்தை பதிவு 10இல் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக