புதன், 19 மார்ச், 2014

குண்டலினி தியானம் பதிவு 19

குண்டலினி தியானம். பதிவு 19

அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும். முதல் பதிவில் இருந்து வசிப்பதற்கு:


இப்பொது நாம் இந்த ஆதிசக்தியாகிய குண்டலினி சக்தி நம் உடலில் எங்கு உள்ளது என்று பார்ப்போம். இந்த சக்தி நம் உடலில் நம் முதுகெலும்பின் நுனியில் ஒரு முக்கோணம் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. இந்த பக்குதியில் தான் குண்டலினி சக்தி ஒரு பாம்பின் ரூபத்தில் சுருண்டு படுத்திருப்பது போல் இருக்கின்றாள். நம் முன்னோர்கள் நம் உடலில் இருக்கும் இந்த சக்தியை ஒரு பெண் தெய்வமாக அதாவது நாம் வணங்கும் சக்தியாக குறிப்பிடுகின்றனர். இந்த பிரபஞ்சத்தில் இருந்து நம் உடலுக்குள் நுழையும் சக்தியை ஆண் தெய்வமாகவும் அதாவது எம்பெருமான் சிவமாகவும் வர்ணிக்கின்றனர். இந்த சக்தியின் உதவியுடன் நம் உடலை ஆலயமாகி அதன் மூலம் சிவத்தை உள்ளும் புறமும் உணரும் போதே ஒருவன் முக்தன் ஆகின்றான். எங்கும் எதிலும் இந்த இரண்டு சக்தியும் கலந்திருப்பதை எப்பொழுதும் உணர்பவனே சம்பூர்ண ஜீவன் முக்தனாகின்றான். 

இந்த ஆதி சக்தியாகிய குண்டலினி சக்தியே தானும் சூக்சுமமாக தானும் இருந்து கொண்டு நம் உடலிலும் இந்த சூக்சும சக்கரங்களை உருவாக்குகின்றால். இப்படி உருவாக்கும் போது,


தான் இருக்கும் இடத்திலிருந்து வெளிப்பட்டு முதல் சக்கரமாகிய மூலாதாரத்திற்கு இடமிருந்து வலமாக மேல் நோக்கி செல்கின்றாள் இப்படி செல்லும் போது இந்த மூலாதாரசக்கரம் இடமிருந்து வலமாக சுழல்கின்றது. இப்படி மூலாதாரம் வலப்புறம் (clock wise )சுற்றும் அமைப்புள்ள உடலே ஆண்  சிசுவாக பிறக்கின்றது. 


இந்த ஆண் குழந்தையின் ஒவ்வொரு சக்கரங்களும் எவ்வாறு சுழல்கின்றன என பார்ப்போம்.


மூலாதாரம்    வலப்புறம் சுழல்கின்றது.

சுவாதிஷ்டானம்   இடப்புறம் 
மணிப்பூரகம்   வலப்புறம் 
அணாகதம்      இடப்புறம் 
விசுக்தி          வலப்புறம் 
ஆக்ஞேயம்   இடப்புறம்  
சஹஸ்ராரம்  வலப்புறம்.

சக்தியானவள் தன்  இடத்தில் இருந்து மூலாதாரத்திற்கு வலப்புறமாக மேல் எழும்பி இடப்புறமாக திரும்மி மேல்நோக்கி செல்வாலேயானால் இந்த அமைப்பு கொண்ட சிசு பெண் குழந்தையாக பிறக்கின்றது.


மூலாதாரம்    இடப்புறம் சுழல்கின்றது.

சுவாதிஷ்டானம்   வலப்புறம் 
மணிப்பூரகம்   இடப்புறம் 
அணாகதம்      வலப்புறம் 
விசுக்தி          இடப்புறம் 
ஆக்ஞேயம்   வலப்புறம்  
சஹஸ்ராரம்  இடப்புறம்.

நீங்கள் குண்டலினி சக்தியாகிய தாய் ஒரு பாம்பின் ரூபத்தில் கீழிருந்து மேல் நோக்கி இப்படி ஒவ்வொரு சக்கரத்திற்கும் இடையில் வளைந்து வளைந்து செல்லும்போது இந்த சக்கரங்கள் நன்றாக சுழன்று வலிமை பெறுகின்றன.


இப்படி மூலாதாரத்தை சுழல செய்யும் முன்  , பூர்வ ஜென்மபலனால் தடை ஏற்பட்டு பின்  வலப்புறம் சுழல வேண்டிய மூலாதாரம் இடப்புறம் சுழலுமேயானால்  அது ஆணின் குணமும் உடலும் கொண்ட பெண்ணாகவும். 

இடப்புறம் சுழலவேண்டிய மூலாதாரம் தடை ஏற்பட்டு வலப்புறம் சுழலுமேயானால் அந்த சிசு பெண்ணின் குணமும் உடலம்மைப்பும் கொண்ட ஆணாகவும் பிறக்கின்றது.

இப்படி உருவாக்கி விட்டு மீண்டும் தன இருப்பிடத்திற்கு வந்து ஓயவெடுக்கின்றால். இப்படி ஓய்வெடுப்பதற்கு முன் அனைத்து சக்கரங்கலிடமும் தன்னை எழுப்பவேண்டாம் எனவும், மிக அவசியம் என்றால் நானே எழுந்து வந்து உதவுவேன் என்று சொல்லிவிட்டு செல்கின்றாள். 
இதில் மூலாதாரத்தின் அதிபதியாகிய மஹா கணேசரே முதன்மை காவலாக இருக்கின்றார். நம் வாழ்வில் எந்த ஒரு செயலையும் வெற்றியுடன் செய்ய நாம் தடைகளை நீக்க கூறி விநாயகரையே வணங்குகின்றோம். அதை போலவே ஆன்மீகத்தில் மற்றும் இந்த குண்டலினி தியானத்தில் முழு முதல் கடவுளாக விநாயகரையே வணங்கி தொடங்கவேண்டும். ஆம் மூல பொருள் மூலாதாரத்தில் வீற்றிருக்கும் நம் கணபதியே தாயாகிய சக்தியின் ஆணைப்படி சிவமே வந்த போதும் தாயை பார்க்க விடாமல் தடுத்து காவல் புரிபவர்.  
அடியேன் இந்த தொடரை சுருக்கமாக எழுதவே முயற்சிக்கின்றோம். ஆனால் எதை தொடங்கினாலும் அதில் உள்ள முக்கியத்துவமும் மேன்மையும் விருட்சம் போல் வளர்ந்துகொண்டே செல்கின்றது. இருப்பினும் எம்மால் முடிந்த அளவு சுருக்கமாக எழுத முயற்சிக்கின்றோம்.

இனி நாம் பதிவு 20 தில் மற்ற இரு நாடிகளாகிய இடகலை மற்றும் பிங்கலை பற்றி பார்ப்போம். 





வியாழன், 6 மார்ச், 2014

குண்டலினி தியானம். பதிவு 18

குண்டலினி தியானம். பதிவு 18

அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும்.
அனைத்து பதிவுகளையும் வாசிக்க :

http://blissfulllight.blogspot.ca/2013/10/blog-post_25.html

இந்த சக்தி உடல்கள் இயங்க  நமக்கு உயிர்சக்தி சீராக நம் உடலில் பரவவேண்டும்,  அதற்கு நம் உடலில் நாடிகள் உள்ளன, இந்த நாடிகளே பிரதானமாக இருந்து உயிர்சக்தியை சகரங்களின் துணையுடன் உடல் முழுதும் சீராக கொண்டு செல்கின்றது. வேதங்களில் நம்முள் பல லட்சம் நாடிகள் இருப்பதாகவும், அதில் சில பிரதானமனதாகவும், சில அதன் துணை நாடிகலாகவும், பல சிறு நாடிகலாகவும் சொல்லப்படுகின்றது. இதில் அனைவரும் அறிந்ததாக சொல்லப்படுவது 72.000 நாடிகள், இதில் பிரதான மான நாடிகள் 3. இந்த இந்த நாடிகள் இடகலை, பிங்கலை, சுழுமுனை என்று அழைக்கப்படுகின்றது.


சுழுமுனை.
நமது உடலில் அதி பிரதானமானதாக சொல்லப்படுவது இந்த சுழுமுனை நாடி. இதை சுசும்னா நாடி என்றும் சொல்வதுண்டு. நம் உடலில் இருக்கும் அனைத்து நாடிகளுக்கும் ஆதாரமாக இருப்பதே இந்த சுஷும்னா நாடிதான்.

இது நமது முதுகு தண்டின் நுனிப்பகுதியில் துவங்கி, நமது உச்சந்தலையில் முடிகின்றது.இந்த நாடி நம் உடலுக்கு தேவையான உயிர்சக்தியை 7 சக்கரங்கள் மூலமாக உடல் முழுவதும் மற்ற நாடிகளின் உதவியுடனும் கொண்டு செல்கின்றது. இது தவிர இந்த சுஷும்னா நாடியின் மிக முக்கியமான வேலை, நம் முதுகு தண்டின் கீழ் நுனியில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும்  குண்டலினி சக்தி என்னும் அதி உயர்ந்த சக்தியை, முதுகுத்தண்டின் வழியாக நம் உடல் முழுவதும் பரவசெய்கின்றது.

சாதாரண மனிதர்களுக்கு மிக மிக குறைந்த அளவு குண்டலினி சக்தியே உடலில் பரவுகின்றது. அதிக பக்தி, யோகாசனம், தியானம், பரதம், பக்தி மற்றும் சங்கீதம் பாடுபவர்கள், போன்ற சாதகங்களை தொடர்ந்து செய்வதால் குண்டலினி சக்தி தட்டி எழுப்பப்பட்டு அதிக அளவு சுளுமுனைனாடியின் மூலம் பாய்கின்றது. இவ்வாறு பாயும் குண்டலினி சக்தி நம் உடலில் உள்ள சகரங்களை வேகமாக சுழலசெய்து பிரபஞ்ச சக்தியை உள்ளிழுத்து நம் உடல் முழுதும் பாயசெய்து நம் உடல் பரிபூரண ஆரோக்யமும், இளமையும் பெறுவதோடு, நாம் விரும்பும் பேரானந்தத்தையும் அளிக்கின்றது.

இந்த குண்டலினி சக்தி எங்கு உள்ளது அது பற்றிய அதிசயத்தக்க சில விடயங்களை பதிவு 19 இல் பார்ப்போம்.

செவ்வாய், 4 மார்ச், 2014

குண்டலினி தியானம். பதிவு 17

அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும்.
அனைத்து பதிவுகளையும் வாசிக்க :

http://blissfulllight.blogspot.ca/2013/10/blog-post_25.html


நாம் 7 சக்தி உடல்களை பார்பதற்கு முன்பு. நாம் ஏன் கடுக்காயைப்பற்றியும் திருமூலர் கூறியது பற்றியும் தொடர்ந்து சொல்வதற்கு என்னகாரணம் என்பதை எனது அனுபத்தில் இருந்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு கீழ நாம் கொடுக்கும் புகைப்படத்தை பார்த்தால் தெரியும்.


இரண்டு வருடங்களுக்கு முன்பு.





அதிக இரத்த அழுத்தம், இரத்தத்தில் அதிக கொழுப்பு, தைரோயடு, இரத்தத்தில் அதிக தடிப்புதன்மை, உடல் எடை 227 பவுண்ட்ஸ் .

தற்போது :

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LMkC-fCFN3E#t=65


திருமூலர் கூறிய காலையில் 4 slice இஞ்சி போட்ட டீ ( தேத்தண்ணீர்)

மதியம் சாப்பிட்டு 1 மணி நேரத்திற்கு பின் ஒரு சிட்டிகை சுக்கு போட்ட  டீ (வேர்கொம்பு தேத்தண்ணீர்). இரவில் சாப்பாட்டிற்கு 2 மணி நேரத்திற்கு பின், நித்திரைக்கு 30 நிமிடத்திற்கு முன். அரை தேக்கரண்டி (spoon ) கடுக்காய் பொடியை மெல்லிய சூடு உள்ள தண்ணீரில் கலந்து குடித்து வந்தோம். இரு வருடத்திற்கு பின்னும் தற்போதும் எமது எடை. 171 பவுண்ட்ஸ். இரத்தத்தில் கொழுப்பு சரியான அளவு உள்ளது, இரத்த அழுத்தம் சரியாக உள்ளது, தைராய்டு வருத்தம் இல்லை, இரத்தத்தின் தடிப்பு சரியான அளவு உள்ளது. 1 வருடத்திற்கு மேலாக மருத்துவர் எந்த ஒரு மருந்தும் பரிந்துரை செய்யவில்லை. காரணம் தேவையில்லை என 6 மாதத்திற்கு ஒரு முறை சோதித்து சொல்லுகின்றார். தற்போது எமது புகைப்படம்.

இவ்வாறு நம் முன்னோர்கள் காட்டும் வழியை தற்போது உள்ள மருத்துவரின் ஆலோசனையின் படியும் அடியேன் செய்த முயற்ச்சியின் பலன் இப்போது நீங்கள் கண்கூடாக பார்க்க கூடியதாக உள்ளது. நம்பிக்கையும் விடமுயர்ச்சியும் இருந்தால் நாம் மீண்டும் இளஞ்சனாக மாறமுடியும். யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், என்ற நல்ல நோக்கத்தோடு இதை பகிர்கின்றோம். நீங்களும் சரியான ஒரு சித்த மருத்துவரை பார்த்து பின் இதே முறையையோ அல்லது சில மாற்றங்களுடனோ உணவாகிய இந்த மருந்தை பயன்படுத்தி ஆரோக்யமாக வாழ்வதுடன் இப்பிறவிக்கு முளுக்காரனமாகிய  முக்தியை அடைந்து பேரானந்த பெரும்ஜோதியில் கலப்போமாக. வாழ்க பேரானந்தத்துடன்.இப்போது விடயத்திற்கு வருவோம். நம் 7சக்தி உடல் பற்றியும் அதன் சக்தி எப்படி நமக்கு உதவுகின்றது என்பது பற்றி இனி பதிவு 18 இல் பார்ப்போம்.






குண்டலினி தியானம். பதிவு 16

அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும்.
அனைத்து பதிவுகளையும் வாசிக்க :

http://blissfulllight.blogspot.ca/2013/10/blog-post_25.html

4. விஞ்ஞானமய கோசம்.

இது உணர்வுபூர்வமான அறிவு தெளிவின் மூலம் இயக்கப்படும் கோசம். அன்பு, பாசம், கருணை,மகிழ்ச்சி போன்ற நல்ல உணர்வுகளால் இந்த கோசம் வலுவடைவதுடன் சீராக இயங்குகின்றது.

இந்த கோசம். வெறுப்பு, கோபம், துக்கம், பயம், போரான்மை போன்ற எதிர்மறை உணர்வுகளால் வலுவிழந்து நோய்வாய் படுகின்றது.

இதை இப்போது உள்ள மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் பல ஆய்வுகளில் கண்டு வெளிபடுத்தி உள்ளனர்.உதாரணமாக.
மனதில் நீண்ட நாட்களாக தேக்கி வைத்திருக்கும் வெறுப்பே புற்றுநோயாக உருவெடுக்கின்றது. தீராத கோபம்,வெறுப்பு, குரோதம் ஆகியவையே புற்றுநோயாக உருவாகின்றது என்றும், இது தாயின் மூலம் குழந்தைகளுக்கும் வருவதாகவும் கூறுகின்றனர்.

நம் வாழ்வில் நாம் காட்டும் பரபரப்பு (டென்ஷன்) இரத்தகொதிப்பு,அல்சர்,ஆஸ்துமா, மாரடைப்பு போன்ற நோய் வருவதற்கு காரணமாகின்றது. 

இதை பக்தியின் மூலமும், தியானத்தின் மூலமும் மட்டுமே நாம் வலுவடைய செய்ய முடியும்.

 

5.ஆனந்தமய கோசம்.
இந்த கோசம் வலுவடையவேண்டுமானால், முதல் உள்ள நான்கு கோசங்களும் வலுவடையவேண்டும்.அப்படி வலுவடைந்து விழித்தெழும் போதே நாம் அதிமுகியமான் உன்னதமான நிலையை அடைகின்றோம்.இந்த ஆனந்தமய கோசம் வலுவடைந்து முழுமையடைவதையே வாழ்வின், நம் பிறப்பின் நோக்கம் என ஞானிகளும் ரிசிகளும் சித்தர்களும் கூறிவந்துள்ளனர். அதுவே இத்தனை பிறவிகளாக நாம் தேடும் முக்தி. அதாவது தெய்வத்தை உணர்தல். இந்நிலையில்  தொடர்ந்திருப்பவரே சம்பூர்ண ஜீவன்முக்தன்.

இந்த நான்கு கோசங்களும் வலுவடைந்தால் மட்டுமே 5 வது கோசம் வலுவடையும்.இந்த நான்கு கோசங்களும் வலுவடைய நாம் செய்யவேண்டியது.

1.அன்னமய கோசம்: உணவுக்கட்டுப்பாடு, யோகாசனம், உடற்பயிற்சி.

2:பிரணமய கோசம்: சுவாச பயிற்சி, நடனம்.

3.மனோமய கோசம்: புராண கதைகள்,பக்தி, பக்தி பாடல்கள்.

4.விஞ்ஞான மாய கோசம்: பக்தி, தியானம். 

இவை நான்கையும் ஒரு சேர மிக விரைவில் இயக்குவதே குண்டலினி தியானம். இதன் மூலம் 5 வதாகிய ஆனந்த மாய கோசத்தையும் தட்டி எழுப்பும் அற்புத சக்தி கொண்டதே குண்டலினி தியானம்.

இந்த ஐந்து உடல்களில் சிலவற்றை சராசரி மனிதர்களே நம் கண்களால் காணக்கூடியதாக உள்ளது. சில உடல்களை தியானத்தில் நல்ல நிலையை அடைந்தவர்கள் மட்டுமே பார்க்க முடிகின்றது. 
இந்த 5 உடல்களின் துணையுடன் இனைந்து நமக்கு இன்னும் சக்தி வாய்ந்த  9 உடல்கள் உள்ளன. ஆனால் இவற்றில் 7 உடல்களே பிரதானமாக பேசப்படுகின்றது. இவை சக்தி உடல் எனப்படுகின்றது.

பதிவு 17 இல் சக்தி உடல்கள் பற்றிய விளக்கத்தை பார்ப்போம்.  

திங்கள், 3 மார்ச், 2014

குண்டலினி தியானம். பதிவு 15

அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும்.
அனைத்து பதிவுகளையும் வாசிக்க :

http://blissfulllight.blogspot.ca/2013/10/blog-post_25.html

நம் வேதங்களில் நமக்கு 5 பரு உடல்கள் உள்ளதாக கூறப்படுகின்றது 
அவை.



1. அன்ன மய கோசம்-  ஆங்கிலத்தில் material body 
2. பிராண மய கோசம்-                               Ethereal body 
3. மனோமய கோசம்-                 Astral body (Emotional )
4. விஞ்ஞான மாய கோசம்-  
5. ஆனந்த மய  கோசம்-                             Bliss or Spiritual body 

1. அன்ன மய கோசம்.

அன்ன மய  என்பது நாம் உண்ணும் உணவின் மூலம் தோன்றுகின்ற சக்தியால், நம் உடலை இயக்கம் பரு  உடலே இது.

நம் உணவு பழக்கங்கள் சரியாக இல்லை என்றால், நாம் உண்ணும் உணவுக்கேற்ப இந்த உடல் பாதிப்படையும், அல்லது சரியான உணவுபழக்கம் இருந்தால் ஆரோகியமடையும்.அப்படி இந்த உடல் நோயுற்றால், அதை சரி செய்ய, சரியான உணவு கட்டுப்பாடு, உணவு முறையில் மாற்றங்கள் செய்வதன் மூலம் ஆரோக்கியமாக்கி கொள்ளலாம்.சரியான முறையில் உடற்பயிற்சி செய்தல்,  யோகாசனம் செய்தல்  முத்திரை பயிற்சி செய்தல் மூலமாக இந்த உடலை மிகவும் வலிமையாக்கிக்கொள்ளலாம்.

2.பிராண மய  கோசம்.

அன்ன மாய கோசத்தோடு இனைந்து நம் உடலை இயக்கும் ஒரு கோசம் . இது பிராண என்பது நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து உருவாகும் சக்தியே, இந்த உடலின் மூலம்.

நாம் சுவாசிக்கும் முறை சரியில்லை எனில் நம் உடலுக்கு தேவையான பிராண சக்தி கிடைப்பதில்லை, இதனால் பல நோய்கள் வருவதுண்டு, இவற்றை சரிசெய்ய,சரியான மூச்சிபயிற்சி, அதாவது பிராணாயாம, இதில் பல வகை உண்டு, இவற்றை தினம் காலை நேரங்களில் 4.30 முதல் 6.00 மணிக்குள் செய்தால், இந்த உடலில் உள்ள நோய் அனைத்தும் நீங்கி ஆரோக்கியமாக இருக்கும்.

3. மனோ மய கோசம்.

மனோ மயம், இது நம் மனதில் தோன்றும் என்னகங்களை பொறுத்தே ஆரோக்கியமாக இருக்கும். நல்ல எண்ணங்கள் இல்லை எனில் இந்த உடல் நோயுற்று நமக்கு பாதிப்பைதரும். இதை சரி செய்ய நாம் செய்யவேண்டியது, கடைபிடிக்கவேண்டியது, பக்தி மார்க்கமே. இறைவனிடம் பக்தி அதிகமாகும் போது இந்த உடல் தூய்மை அடைகின்றது. புராணங்கள், இதிகாசங்கள், நீதிகதைகள் இவற்றை படித்து அவ்வாறே வாழும் போது இந்த உடல் வலுவடைகின்றது.

இனி விஞ்ஞானமய கோசத்தை பற்றி பதிவு 16 இல் பாப்போம். 



குண்டலினி தியானம். பதிவு 14

அன்பர்கள் முதல் பதிவிலிருந்து வாசிப்பதே முழுமையான தெளிவைத்தரும்.

இந்த வாத, பித்த, கபத்தை சரியான அளவில் உடலில் இருத்தினால் தான் குண்டலினி தியானம் சித்திக்கும். ஆகவே முதலில் உங்களுக்கு அருகே உள்ள சித்த மருத்துவரை அணுகி, உங்களின் உடலின் சரியான நிலைஅறிந்து அதற்கேற்ற  சிகிச்சை பெறவும். அப்படியான வசதி இல்லாதவர்கள் தாயுமானவர், பட்டினத்தார், திருநாவுக்கரசர், மற்றும் திருமூலர் கூறும் இதனை உங்களின் சொந்த யோசனையின் பேரில் கீழே உள்ள முறையை செய்யவும்.

அதற்கு திருமூலர் சொன்ன எளிமையான வழிமுறைதான்.




என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் 

ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே 

நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், 

நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி 

செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் 

வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் 

என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய 

அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி 

மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை 

யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. 

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட 

வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட 

உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை 

விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் 

பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் 


தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து 

நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் 

பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி 

ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த 

வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, 


சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், 

தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, 

தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல்,மூத்திரக் குழாய்களில் 

உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, 

பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் 

கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் 

கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் 

அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு


மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்


விருத்தனும் பாலனாமே.-


காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து 


ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் 

பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் 

நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய 

பொக்கிஷமாகும்.


இப்படி 48 நாட்கள் தொடர்ந்து செய்பவர்கள், உடல் ஆரோக்கியத்திலும் மன 

ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றத்தை உணரலாம்.


இப்பொது நாம் நம் உடல் பற்றிய மேலும் தெரிந்துகொள்வோம். நாம் சாதாரணமாக 

நினைப்பது நாம் காணும் இந்த உடல் ஒன்று மட்டுமே என நினைக்கின்றோம். 

உண்மையில் இது 5 உடல்களை கொண்டது, அது பற்றி பதிவு 15இல் பார்ப்போம்.